Tuesday, 25 March 2014

மின்சார வசதி இல்லாத 11 கிராமங்கள் பாலமலை பஞ்.,ல் மக்கள் கடும் அவதி

மேட்டூர்: பாலமலை பஞ்.,ல், 22 கிராமங்களில் மின்வசதி இருக்கு நிலையில், 11 கிராமங்களில் இன்னமும் மின்வசதி இல்லாதது மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உள்பட்ட, மேட்டூர் சட்டசபை தொகுதி, பாலமலை பஞ்.,ல் 33 கிராமங்கள் உள்ளது. இதில், மின்வாரியம், 22 கிராமங்களுக்கு கம்பம் அமைத்து, மின்இணைப்பு வழங்கியுள்ளது.
ஆனால், பஞ்.ல் மற்றொரு பகுதியில் உள்ள ஈச்சங்காடு, நத்தங்காடு, குங்கிலியங்காடு, தொங்கலம்பாலி, நாகம்பதி, துவரங்காடு, கொள்ளுக்காடு, காரப்பாலிக்காடு, அணைக்காடு, திம்மம்பதி, பெரியகுளம் ஆகிய, 11 கிராமங்களுக்கு இன்னமும் மின்வசதி வழங்கப்படவில்லை. பெரியகுளம் ஓட்டுசாவடிக்கும் மின்வசதி கிடையாது.
தற்போது அடிவாரத்தில் இருந்து பாலமலைக்கு ரோடு போடப்பட்டுள்ளது. ரோடு வழியாக எளிதாக மின்கம்பம் எடுத்து சென்று, நட்டு, 11 கிராமங்களுக்கு மின்வசதி வழங்க முடியும்.
எனவே, தங்கள் கிராமங்களில் மின்வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 11 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 - Thanks Dina Malar

No comments:

Post a Comment